கொங்கு நாடு பிரிக்கப்பட வேண்டும்: பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேச்சு  

கொங்கு நாடு பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

கொங்கு நாடு பிரிக்கப்பட வேண்டும்: பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேச்சு   

கள்ளக்குறிச்சி மாடூர் கிராமத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கூட்டத்தில் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க வேண்டும் , கல்வராயன்மலை பகுதியில் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, கொங்கு நாடு என்பது பொதுமக்கள் எதிர்பார்க்கும் விஷயம் தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் கொங்கு நாடு கொண்டு வரலாம் என பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் கருத்து தான் செய்திகளாக வருகின்றன என அவர் தெரிவித்தார்.