நிவாரண உதவிகளை வழங்க தாமதமாக வந்த குஷ்பு- பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை பட்டினப்பாக்கத்தில், நிவாரண உதவிகளை வழங்க குஷ்பு வர தாமதமானதால், பொதுமக்கள் பாஜக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

நிவாரண உதவிகளை வழங்க தாமதமாக வந்த குஷ்பு- பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை பட்டினப்பாக்கத்தில், நிவாரண உதவிகளை வழங்க குஷ்பு வர தாமதமானதால், பொதுமக்கள் பாஜக நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

பட்டினப்பாக்கத்தில் உள்ள டுமீல்குப்பம்  குடியிருப்புவாசிகள் 300 பேருக்கு பாஜக சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என கூறி டோக்கன் வழங்கப்பட்டது.

காலை 10 மணிக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறப்பட்டதை அடுத்து காலை 9 மணி முதலே,சுட்டெரிக்கும் வெயிலில், மக்கள் வரிசை கட்டி நின்றனர்.

ஆனால், குஷ்பு வர தாமதமானதால், ஆத்திரமடைந்த மக்கள், பாஜக நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இந்தநிலையில் அங்கு வந்த குஷ்பு, நிவாரண உதவிகளை வழங்கினார்.