பேருக்காக மட்டுமே திறக்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் - அமைச்சர் பொன்முடி

பேருக்காக மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பேருக்காக மட்டுமே திறக்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் - அமைச்சர் பொன்முடி

பேருக்காக மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்பது தேவையற்ற ஒன்று. ஏற்கனவே நாகப்பட்டினத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் உள்ளது. விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரம் ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்யும் செயலாக கருத முடியாது என்றார்.

மேலும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்பது கல்வி வளர்ச்சிக்காக எடுத்த முடிவு எனவும், பேருக்காக மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.