திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இந்த அனுமின் நிலையத்தில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் வகையில், 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான கான்கிரீட் போடும் பணிகளை நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.