சி.சி.டி.வி இருக்குதோ.. மறந்துட்டாரு போல.. வாகன சோதனையில் சம்பவம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரான முதியவர் கைது.. ஏன்?

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த உதவி ஆய்வாளரை ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநரான முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.சி.டி.வி இருக்குதோ.. மறந்துட்டாரு போல.. வாகன சோதனையில் சம்பவம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநரான முதியவர் கைது.. ஏன்?

சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரான பொன்ராஜ் கடந்த 3ஆம் தேதி இரவு நந்தம்பாக்கம் பட் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட முயன்றபோது வேகமாக வந்த அந்த ஆட்டோ உதவி ஆய்வாளர் பொன்ராஜை இ டித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. 

ஆட்டோ மோதியதில் கை, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் லேசான காயங்கள் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து  தொடர்பான சிசி டிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.சி. டி.வி காட்சிகளை கொண்டு நந்தம்பாக்கம் மற்றும் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜை மோதிச்சென்ற ஆட்டோ எண்ணை வைத்து லட்சுமி நகரில் வசித்து வரும்  65 வயதான முதியவர் சுதர்சனம் கைது செய்யப்பட்டார். புனித தோமையார் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.