தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி விவாதிக்க மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 3 வகைகளாக மாவட்டங்களை பிரித்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளன. வருகிற 28-ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இதனிடையே, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு. கஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

ஊரடங்கு நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா? மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளார். மேலும், கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-