இணையதள பத்திரிகை நிருபரின் அடாவடி... போதையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு...

சென்னையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம், குடிபோதையில் வாக்குவாதம் செய்த தனியார் இணையதள பத்திரிகை நிருபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

இணையதள பத்திரிகை நிருபரின் அடாவடி... போதையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு...

சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் அவ்வழியாக வந்த தமிழ் தலைமுறை நிருபர் பாலகுமாரன் என்பவர் அதிக போதையில் வாகனத்தை ஓட்டி வந்தார். அங்கே அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை தடுப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் சோதனை செய்தனர்.  அதில் போதையின் அளவு 102 ஆக இருந்தது.

போதை சராசரி அளவு 30 என்ற அளவில் இருந்தாலே அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்குகிறார் என் றுஅர்த்தம்.  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் பாலகுமாரன் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்கினார் என்று வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் அகில இந்திய பிரஸ் கிளப்  வடசென்னை செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் போலி பத்திரிக்கையாளர்களை களை எடுப்பதற்கு நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதியரசர் மூலம் கமிட்டி அமைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.