சர்வதேச புத்தக கண்காட்சி; 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு..!

சர்வதேச புத்தக கண்காட்சி; 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு..!

தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. , மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி திங்கட்கிழமை தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இஸ்ரேல், இத்தாலி, உகாண்டா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சிக்காக, 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பார்வையாளர்களுக்காக மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்பட உள்ளது.