வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்...!

அதிமுக  பொதுக்குழுவை முன்னிட்டு  பேனர்கள் வைப்பதற்காக சாரங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வானகரத்தில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்...!

அதிமுக பொதுக்குழு வருகின்ற 11ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு நடைபெறுமா நடைபெறாதா என தொடண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவி வரும்  நிலையில் கடந்த ஆறு தினங்களாக மேடைகள் அமைக்கும் பணி மின் விளக்குகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  பொதுக்குழுவிற்கு வருகை தரக்கூடிய தலைவர்களை வரவேற்கும் விதமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பேனர்கள் வைப்பதற்காக சாரங்கள் கட்டும் பணியானது நடைபெற்றது. 

இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை ஈபிஎஸ் தரப்பின் ஆதரவாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..