அமெரிக்காவிற்கு முன்பே இந்தியாவில் வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்!

அமெரிக்காவிற்கு முன்பே இந்தியாவில் வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்!

இந்திய ரசிகர்கர்களால் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகச திரைப்படமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’  அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகச திரைப்படமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’  அமெரிக்க திரையரங்கங்களில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய திரையரங்குகள் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதில் புகழ்பெற்ற ஹாலிவுட ஹீரோ, ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் நடித்துள்ளார். பேன்டிஸி திரில்லர் சினிமாக்களில் இந்தியானா ஜோன்ஸ் திரைப்படங்களுக்கு ஒரு மாபெரும் ரசிகப் பட்டாளம் இருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் கனிசமான அளவில் உள்ளனர். இதனால் அமெரிக்காவிற்கு முன்னதாகவே இந்தியாவில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இப்படத்தில், ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கிய இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இன்னும் படிக்க:மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கும் '1983 உலகக் கோப்பை' கிரிக்கெட் அணி!