குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன?

பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தனியார் பேருந்தில் விருத்தாச்சலத்திற்கு செல்லும் பயணிகள் மட்டும் ஏற வேண்டும் என நடத்துனர் கூறினார். ஆனால் வழியிலிருக்கும் குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடியவர்கள் ஏறுவதற்கு முயன்ற போது, நடத்துனர் தகாத முறையில் பேசியுள்ளார்.
இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகா எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளும்படி போக்குவரத்துப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் துவரம் பருப்பு விலை குறைய உள்ள நிலையில், அதிக விலை கொடுத்து கனடா மஞ்சள் பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல் கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷன் கடை துவரம் பருப்பை வாங்காமல், அதிக விலை கொடுத்து கனடாவிலிருந்து வாங்க உள்ளதாக வெளிவரும் தகவல்களைக் குறிப்பிட்டு, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை குறைய உள்ள நிலையில் அதிக விலை கொடுத்து கனடா பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன? 60000 டன் பருப்பை கிலோ 134 ரூபாய்க்கு வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசிற்கு, 60 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நிலையில் 3 மாதத்திற்கு தேவையான 60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க 144 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் முதல்வன் இணையதளம், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் அழைப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் ஒரே நோக்கம் என்றும், அதன் காரணமாக கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க 144 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெற்று ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மசூலிப்பட்டினத்திற்கு 940 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுப்பெற்றுள்ளதாகவும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3-ம் தேதி புயலாக மாறக் கூடும் என்றும் தெரிவித்தார். இந்த புயல் சின்னம் 4-ம் தேதி சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து, டிசம்பர் 3 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
புயலின் தாக்கத்தை எதிர்க்கொள்ளும் வகையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக உருமாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க : அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு...!
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், புயலின் தாக்கத்தை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர் மின்சார வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
புயலின் சீற்றம் காரணமாக விழக்கூடும் மரங்களை உடனடியாக அகற்றும் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.