அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

முறைகேடு செய்தவர்கள் யார் என்பதை அண்ணாமலை குறிப்பிட்டால் நான் அதற்கு பதில் அளிப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கும், சிலைக்கும்  ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதையும் படிக்க : ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், திமுக ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை அடுத்தடுத்த பார்ட் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஓ பன்னீர்செல்வம், முறைகேடு செய்தவர்கள் யார் என்பதை அண்ணாமலை  குறிப்பிட்டால் நான் அதற்கு பதில் அளிப்பேன் என தெரிவித்தார்.