”தவளை தன் வாயால் கெடும்”...”பிடிஆர் ஆடியோவால்” சிக்கிக்கொண்டார்...செல்லூர் ராஜூ அதிரடி!

”தவளை தன் வாயால் கெடும்”...”பிடிஆர் ஆடியோவால்” சிக்கிக்கொண்டார்...செல்லூர் ராஜூ அதிரடி!

பிடிஆரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் ஆடியோ விவகாரம் உண்மையாகிவிடும் என்பதற்காக தான் இந்த மாற்றம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது 69 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் பிறந்தநாள் விழா, மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

இதையும் படிக்க : அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடி மாற்றம்... !

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் திமுக அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு 30,000 கோடி ரூபாய் ஆடியோ தான் காரணம் என்றும், தவளை தன் வாயால் கெடும் என்பது போல பிடிஆர் கெட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இப்போது அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதற்காக சாதாரண ஒரு இலாகாவை கொடுத்து இருப்பதாக விமர்சனம் செய்தார். 

அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை துறை  ஒதுக்கீடு செய்தது சிறந்த முடிவு எனவும், அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்றும், எந்த துறையிலும் முத்திரை பதிக்க கூடியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.