பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யாராலும் நாட்டை காப்பாற்ற முடியாது - தொல். திருமாவளவன் எம்.பி

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யாராலும் நாட்டை காப்பாற்ற முடியாது - தொல். திருமாவளவன்  எம்.பி

திறந்தவெளி மாநாடு  

மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த  வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

 சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நடந்த திறந்தவெளி மாநாடுட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி  பேசியது புராண புனைவுகள் மீது நம்பிக்கையுள்ள சக்திகளோடு  நாம்  மோதி கொண்டு இருகிறோம்  அதுதான் பிரச்சனை அறிவாளிகளோடு விவாதம் செய்யும் போது  அறிவியல் ரீதியாக  இருக்கும் மேலும் மேலும் கூர்மை பெறுவோம் அதிலிருந்து நாமும் கற்றுக்கொள்ள முடியும்.நம்மிடம் பிழை இருந்த  அதனை நம்மால் திருந்திக்கொள்ள முடியும் ஆனால் நம்பிக்கை என்கின்ற பெயரில் அறிவியலுக்கு முரணான புராண கருத்துக்களை  தூக்கி பிடிக்கின்ற சக்திகளிடம் எப்படி வாதிடவும் முடியாது.அடுத்த கட்டம் நோக்கி நகரவும் முடியாது அதுதான் சிக்கல்.

மோடியின்  முகத்திரை கிழிந்து வருகிறது . அதையும் பிபிசி கிழித்திருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்த உண்மையை மோடி மறைத்த உண்மையே உலகின் உண்மை வெளியில் கொண்டுவருவதற்கு உலகின் ஏதாவது ஒரு மூளையில் இருந்து ஏதாவது அறிவார்ந்த தாக்குதல் நிகழும்.பிபிசி  வெளியிட்டு 2 தொகுப்பு ஆவணப்படம் குஜராத் வன்முறை. அதில் மோடி முதல்வராக இருந்த போது அவர் பேசியபேச்சு இருக்கிறது. சிறுபான்மை சமூகத்திறகு முஸ்லீம் சமூகத்திறகு எதிராக வெறுப்பு அரசியல் இருக்கிறதே. இன்றைக்கு மீண்டும்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. குஜராத்தில் இன படுகொலைநடத்திய நபர் இன்றைக்கு புனிதராக போற்றப்படுகிறார் மிகப்பெரிய ஆளுமையாக போற்றப்படுகிறார. மிக உயர்ந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார். எவ்வளவு ஆபத்து என எண்ணி பார்க்க வேண்டும். குஜராத் கலவரம் தான் மோடியே தேசிய கதாநாயகனாக உயர்த்தியது.  3000 இஸ்லாமியர்களை படுகொலை செய்த பிறகுதான்    கொடூரமான இந்த நபரை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது. சனாதான கும்பல் இவர்தான் நமக்கு தேவை என தேர்ந்தெடுத்தது. 

என்னன்னவோ திட்டங்களை சனாதான கும்பல கையில் வைத்திருக்கிறது. 2024 ல் நாம் எதிர்கொள்ளகூடிய நாடாளுமன்ற தேர்தல் தான் சாதராண,பொதுவான  தேர்தல்  அல்ல, இதை நாம் மிகுந்த வேதனையுடன் பதிவுசெய்கிறேன்.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என்கின்ற மனநிலையில் செயல்பட்டால் போதாது திமுகவின் கூட்டணி வெற்றி பெற்றால் மட்டும் போதும் என்கின்ற நிலையிலே  செயல்பட்டால் மட்டும் போதாது. இந்த சனாதன கும்பல் டெல்லியில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் ஆட்சி பீடத்திலிருந்து இவர்களை விரட்டவேண்டும். மிகபெரும் பிரச்சனை சூழ்ந்திருக்கிறது. இவர்கள் மட்டும் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் யாராலும் அழிவிலிருந்து தடுக்க முடியாது.

நாட்டை காப்பாற்ற அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற மிகபெரும் சூழல்  நம்மை சூழ்ந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால் யாராலும்  நாட்டை காப்பாற்ற முடியாது இவர்கள் பதவிக்காக எதை வேண்டுமானலும் செய்யகூடிய கும்பல் .

 ரதி ராஜேந்திரன்

மேலும் படிக்க | குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாடு......” பழனிவேல் தியாகராஜன் கூறியதென்ன