சென்னையில் 3ம் நாளாக தொடரும் ஐடி ரெய்டு...!

சென்னையில் 3ம் நாளாக தொடரும் ஐடி ரெய்டு...!
Published on
Updated on
1 min read

வரிஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறையினர் 3ம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.


பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்சி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்குச் சொந்தமான நாடு முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஐடி ரெய்டு தொடங்கியது. வரிஏய்ப்புப் புகார் வந்ததைத் தொடர்ந்து சோதனை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை மட்டுமின்றி தெலங்கானா, ஆந்திராவிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளரின் வீடு, சென்னை கிண்டியில் உள்ள ரேடியன்ஸ் கட்டுமானம் நிறுவனம், அதன் உரிமையாளர் வருண் மணியன் வசிக்கும் ஆழ்வார்பேட்டை வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று சோதனை தொடர்ந்துள்ளது. ஆய்வில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com