தன்னை எதிர்த்து பேசினால் பழி வாங்குவேன்....!!!

தன்னை எதிர்த்து பேசினால் பழி வாங்குவேன்....!!!

பிரதமர் மோடி அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுவதாகவும், ஒரு நபரை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத்தையே செயல்பட விடாமல் தடுப்பதாக மயிலாடுதுறையில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிர்வாகிகளுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.   அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 

உண்மையைச் சொன்னால் கைது செய்து சிறையில் அடைக்க கூடிய எழுதப்படாத ஒரு சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி அமல்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார்.  மேலும் நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால் தான் இது போன்ற கைது நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுவதாகவும் , இந்திய நாட்டையே அதானிக்கு அடகு வைத்து விட்டதாகவும் கூறினார்.  மேலும் ஒரு நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே செயல்படாமல் தடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தன்னை எதிர்த்து பேசினால் பழி வாங்குவேன் , தீர்த்து கட்டி விடுவேன் என்கின்ற பாசிச ஆட்சியை மோடி செய்வதாகவும் , மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்துள்ளார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்.

இதையும் படிக்க:   இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் விற்பனை!!!