சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்..! போலீசாரால் கைது!!

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்..! போலீசாரால் கைது!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது  செய்தனர்.

தேவகோட்டை புதூர்சத்திரம் இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த விமல்ராஜுக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், அங்கிருந்த கட்டையால் பிரியாவை விமல்ராஜ் தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தேவகோட்டை டவுன் போலீசார் விமல்ராஜ் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.