மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவர் மற்றும் மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   

மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறை

சென்னை கிண்டி சதானிபேட்டைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும் திருவண்ணா மலைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த 3 மாதத்தில் சுகன்யாவை, அவரது கணவர் பார்த்திபனும், மாமியார் பத்மாவும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சுகன்யா கடந்த 2012-ஆம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், பத்மா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமத் பாரூக், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பார்த்திபன், பத்மா இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.