இந்நிலையில், தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கிஅம்மன் கோயிலில், தூத்துக்குடி மேற்கு மண்டலம் சார்பாக எல்.ஆர்.சரவணக் குமார் தலைமையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், ஆழ்வார், சுடலைமணி, உள்ளிட்டோர் கோயில்களை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, ஆலயம் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர்.