தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்...... 

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்...... 

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் விசாரணை:

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

சிக்கல்கள்:

அப்போது அரசுத்தரப்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும்,  அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை எனவும், பல இடங்களில் இயந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை எனவும் பருவமழை காரணமாகவும் இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு உத்தரவு:

அதனால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும், முன்னேற்றம் காட்டப்படும் எனவும் அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு:

சீமைக்கருவேல மரங்கள் நோய் போல பரவுவதாகவும், அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதிதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

எச்சரிக்கை:

இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14ம் தேதி வரை வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டாம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப்படுகொலைகள் என்பது ஈழப்பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பானது” சீமான்!!!