சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ........

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.   
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ........

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இரைச்சலுடன் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது

சென்னையை பொருத்தவரை நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com