கன மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு...

வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு...

வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வருஷநாடு மற்றும் மூல வைகை உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மதுரை வைகை ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,

வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரும் நிலையில்,  வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள யானைக்கல் தரைப்பாலத்தின் கனரக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.