கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்  சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.