குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம் ?

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம் ?

குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

திமுக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு எதிர்கட்சிகள் இந்த திட்டம் தொடர்பாக பல கேள்விகளை முன்வைத்தன.   

இந்நிலையில் இந்த திட்டத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தியுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிடுள்ளது. மேலும், நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொருளாதார நிபுணர் குழுவுடன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு ...கண்ணீர் விட்டு வாக்குமூலம் அளித்த சுவாதி மயக்கம் ...