கலங்கரை விளக்கங்கள் ஆசிரியர்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்...

சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள் ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

கலங்கரை விளக்கங்கள் ஆசிரியர்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்...

சமுதாயம் எனும் கடலின் கரையில் உள்ள கலங்கரை விளக்கங்கள் ஆசிரியர்கள், என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று , அது, மனிதர்களை - அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி; புனிதப்பணி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். ஆசிரியர் மாணவர்களின் அறியாமையைக் கல்வியறிவு என்னும் சுத்தியால் செம்மைப்படுத்தி, அறிவுள்ள செய்திகளைப் புகுத்தி அவர்களை உயர்ந்த மாணவர்களாய் உருவாக்குகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

மாணவர்கள் இடைநிற்றலின்றி கற்கவும் தரமான கல்வியை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூகத்தை வளப்படுத்தவல்ல, ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ப தம்மை வலுப்படுத்தி கொண்டு, மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப, கல்வி வளர்ச்சியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வளர்ந்து வரும் உலகின் அத்தனை பரிமாணங்களையும் மாணவர்களை அறிய செய்து, நேர்மை, ஒழுக்கம், உண்மை என்ற அறநெறிகளில் பிறழாது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாக உருவாக்கும் தன்முனைப்போடு செயல்பட வேண்டுமாய் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னரும் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்று இன்புற செய்யும் அனைத்து ஆசிரிய பெருமக்களையும் ஆசிரியர் தின நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.