சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரேனு (44)இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு தாய் , 2 அண்ணன்கள், 1 தம்பிகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் ஈரம் மக்கள் சேவை என்ற மையத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 20 வயதில் இருந்து தசை சிதைவு நோயால் இரண்டு கை மற்றும் கால்களும் செயல் இழந்தவர். தனக்கு 44 வயது ஆகியும் இதுவரை திருமணமாகாமல் தனியாக எந்த ஒரு ஆதரவும் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்.
மேலும் அவரின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம் என்றும் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு இருப்பதாக அதன் மதிப்பு சுமார் 5 கோடி மேல் சொத்து இருப்பதாகவும் அந்த வீடியோ பதிவில் கூறுகிறார். இதனால் தனக்கென்று மாதம் மாதம் வரும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கூட என்னை போன்று மற்றொருவர் பயன்பெற உதவும் என வாங்காமல் வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் தன்னை தனது குடும்பத்தினர் தற்போது கவனிப்பதில்லை, உணவு, பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி செய்யுங்கள் என தன் அம்மாவிடம் கேட்டதற்கு பெற்ற தாயே ஊனத்தை குறை சொல்லி உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் அடித்து சித்திரவதை செய்து வருவதாகவும், இதுகுறித்து அவர் பலமுறை காவல்துறையில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும் எனது உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் நான் வாழ மறுவாழ்வு செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன் ஐயா. நான் உயிர் வாழ வழிவகை செய்யுங்கள், இல்லையெனில் என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவே பார்ப்போர் நெஞ்சை பதற செய்கிறது. மேலும் இதுகுறித்து முதல்வர் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.