நான் தலைமறைவாலாம் இல்லைங்க.. என்னைய கைது பண்ண வேண்டாம்... கெஞ்சும் ஹெச். ராஜா!

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் கோரி, ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நான் தலைமறைவாலாம் இல்லைங்க.. என்னைய கைது பண்ண வேண்டாம்... கெஞ்சும்  ஹெச். ராஜா!

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் கோரி, ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக திருமயம் காவல்நிலையத்தில் தன் மீது வழக்கு பதியப்பட்டு, தற்போது இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த குற்றப் பத்திரிக்கையில் தன்னை தலைமறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளதாகவும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.