"தேர்தல் ஆணையர் பதவிக்காலம்  நீட்டிப்பு" ஆளுநர் உத்தரவு...!

"தேர்தல் ஆணையர் பதவிக்காலம்  நீட்டிப்பு" ஆளுநர் உத்தரவு...!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் பதவிக்காலத்தை  நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமாரின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கியுள்ளார். தமிழ்நாட்டின் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி என ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துகின்ற தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

தன்னாட்சி அமைப்பான இதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வெ.பழனிகுமார் நியமிக்கப்பட்டார். பழனி குமாரின் பதவி காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி வரை அவரின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பழனிக்குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து   ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!