கிரிக்கெட் வீரர் தாயின் காலில் விழுந்த,... ஆளுநர் ரவி....!

மொழி, கலாச்சாரம் கடந்து உலக முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே....

கிரிக்கெட் வீரர் தாயின் காலில் விழுந்த,... ஆளுநர் ரவி....!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின்  தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை   ஆளுநர் ஆர் என் ரவி வழங்கி சிறப்பித்தார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவின் அம்மா என். நாகலட்சுமி, விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ் அம்மா மீனாட்சி சந்திரசேகர்,  திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் அம்மா நாகமணி மேலும் ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு  அன்னையர் தின சிறப்பு விருந்தினை ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி இணைந்து விருதினை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ,

"அன்னையர்கள் வருகையால் ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற ஒரு இடமாக மாறியுள்ளது, அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கபட்ட இடமாக ராஜ் பவன்   மாறியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது".

"தாய் இல்லாமல் நாம் யாரும் இல்லை, மொழி, கலாச்சாரம் கடந்து உலக முழுவதும் உள்ள அன்னையர் அனைவரும் ஒன்றே. மனிதனிடம் உள்ள உணர்வுகள் தாய் மூலம் மட்டுமே கிடைக்கின்றன. அந்த தாய் படித்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதனிடம் உள்ள அன்பு குணங்கள் தாய் மூலம் மட்டுமே வருகின்றன".

" நான் பராசக்தி கடவுளை வணங்கும் ஒருவர் ,நான் கண்களை மூடும் நேரத்தில் பராசக்தி உருவத்தில் என் தாயைப் பார்க்கிறேன். வளர்ந்து வரும் உலகில் தற்போது உள்ள இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தாயின் அன்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்". 

'அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே' என்ற அழகான பாடலை இளையராஜா இசை அமைத்து உள்ளார்; அந்தப் பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை. நாம் எங்கு இருந்தாலும் நம் அம்மாவை கைவிடக்கூடாது" .

இதையும் படிக்க      } அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்...!!

"தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் வெளி நாடுகளுக்கு செல்கின்றனர் தங்களுடைய தாய் தந்தையை தனியாக விட்டு செல்கின்றனர்,ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களை கைவிடுகின்றனர் ஒருபோதும் தங்களுடைய தாயை யாரும் கைவிடக்கூடாது"  எனக் கூறினார்.

இதனிடையே , நிகழ்ச்சியின் போது பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன் ராஜின் தாயார் ஞானசுந்தரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கும் நேரத்தில் ஆளுநர் காலில் விழுந்த ஞானசுந்தரியின்  காலில் ஆளுநர் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும் ஆளுநர் கைகளில் தங்களது பிள்ளைகள் மூலமாக விருது பெறுவது பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் விருது பெற்றவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படிக்க      } புயல் எதிரொலி...9 துறைமுகங்களில் 2 -ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!