தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வார பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில் ஒரு வார பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டெல்லியில் தங்கி இருக்கும் ஆளுநர் 13ந் தேதி இரவு சென்னை திரும்புகிறார்.