புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இனி சாமானிய மக்களின் நிலைமை?

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இனி சாமானிய மக்களின் நிலைமை?

ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலியாக, கடந்த வாரங்களில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உச்சத்தில் இருந்து வருகிறது.

இடையிடையே அதிகரித்தும், குறைந்தும் வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்து, நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு  680 ரூபாய் அதிகரித்து, 40 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  

இதேபோன்று ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 55 ரூபாய்க்கு விலை போகிறது. தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.