கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்கநாணயம் பரிசு... சென்னையில் அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு வழங்கப்படும் என சென்னை கோவளம் இளைஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்கநாணயம் பரிசு... சென்னையில் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றன. அதற்காக மத்திய -மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியும், தடுப்பூசிபோடும் பணிகள் தீவிரப்படுத்தியும் வருகிறது.

தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் பெரிதாக முன்வரவில்லை. எனவே தடுப்பூசி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்கநாணயம் பரிசு வழங்கப்படும் என சென்னை கோவளம் இளைஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

சென்னை கோவளம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கொரோனா இல்லாத கோவளம்" என்ற புதிய குறிக்கோளின் அடிப்படையில் இந்த தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்துள்ளனர். இந்த முயற்சியினால் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.