கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் எருதுவிடும் விழா.. சீறி பாய்ந்த 500-க்கும் மேற்பட்ட எருதுகள்

ஓசூர் அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் எருதுவிடும் விழாவில் 500 க்கும் மேற்பட்ட எருதுகள் சீறி பாய்ந்ததை, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் எருதுவிடும் விழா..  சீறி பாய்ந்த 500-க்கும் மேற்பட்ட எருதுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே தாசனபுரம் என்னும் கிராமத்தில் பாரம்பரியமிக்க எருதுவிடும் விழா நடைப்பெற்றது.

வெங்கட ரமண சாமிகோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட மாடு, காளைகளும் பங்கேற்றன.  தமிழகம் மட்டுமல்லாது,  கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த காளைகள் பங்கேற்றன. சீறி வந்த காளைகளை  அடகுவதற்கு 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

எருதுகளை போட்டிப் போட்டுக்கொண்டு அவர்கள் அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள், எருதுவிடும் விழா ஆர்வலர்கள் பங்கேற்ற எருதுவிடும் விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டி காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பேரிகை போலீசார் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.