ஆக.2ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படம் திறப்பு...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஆக.2ம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படம் திறப்பு...

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் 1921ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை செயல்படத் துவங்கியது. இவ்வாறு சட்டப்பேரவை செயல்பட துவங்கி நூறாண்டு ஆகியுள்ள நிலையில், அதனை நினைவுபடுத்தும் விதமாக, நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் அன்றைய தினம் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப் படத்தை திறக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆகஸ்ட் 2ம் தேதி தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார். இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,  கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.