பாலியல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் வன்கொடுமை  வழக்கில்  முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் கிடையாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி  அளித்த புகாரின் அடிப்படையில்,  முன்னாள் அதிமுக அமைச்சர் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மணிகண்டன் தரப்பில் நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தம்மால் கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும்,  தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது

 காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து  மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி  இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது அனைத்து  தரப்பு  வாதங்களை கேட்ட நீதிபதி , முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதனால் மணகண்டன் சிறையில் இருக்க  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து  மேல் முறையீடு செய்யவும் மணிகண்டன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..