நிலத்தை அபரித்த முன்னாள் வைஸ் சேர்மன்... தட்டிக்கேட்டவரை தரக்குறைவாக பேசியதாக புகார்...

நில அபகரிப்பை தட்டிக்கேட்டவரின் ஜாதிப் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியவர் மீது புகார்

நிலத்தை அபரித்த முன்னாள் வைஸ் சேர்மன்... தட்டிக்கேட்டவரை தரக்குறைவாக பேசியதாக புகார்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மோவூர் கிராமத்தில் வள்ளியம்மை தெருவில் வசிப்பவர் நீலமேகம். இவரின் தந்தை ராமு என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த சின்னப்பா (திமுக முன்னாள் வைஸ்சேர்மன்) என்பவருடன் நிலபரிமாற்றம் முறையில் ராமுக்கு சொந்தமான நிலத்தை சின்னப்பா உழுது பயிரிட்டு வந்துள்ளார் தற்போது அந்த நிலத்தை ராமுவின் மகன் நீலமேகம் என்பவர் தனது பெயரில் பட்டா பதிவு உள்ள என்னுடைய நிலத்தை எனக்கு தான் சொந்தம் என கூறி தனக்கு சொந்தமான நிலத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு  நெற்பயிர் விதைத்து உள்ளார்.

அந்த நெற்பயிரை  சின்னப்பா என்பவர் டிராக்டர் கொண்டு அத்துமீறி நெற்பயிரை புழுதி ஓட்டி அழித்து விட்டதாக தெரிகிறது. இதை கேட்க சென்ற நீலமேகத்தை சாதி பெயரால் தரக்குறைவாக பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட நீலமேகம் சின்னப்பா மீது இன்று காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர் அமுதா இருவரையும் அழைத்து விசாரணை செய்வதாக கூறியுள்ளார்.