ஆண்டவனின் வாக்கே தடுமாறும் போது தனது வாக்கு தடுமாறாதா? - கே.டி.ஆர்!

ஆண்டவனின் வாக்கே தடுமாறும் போது தனது வாக்கு தடுமாறாதா? - கே.டி.ஆர்!

ஆண்டவனின் வாக்கே தடுமாறும் போது தனது வாக்கு தடுமாறாதா என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களுடன் சிறப்புதொழுகை:

சிவகாசி முத்துல்லா ஷா தர்காவில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என அக்கட்சியின் அவைதலைவர் தமிழ் மகன்உசேன், அதிமுக அமைப்புசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர் இஸ்லாமியர்களுடன் சிறப்புதொழுகை நடத்தினர்.

அவைதலைவர் தமிழ் மகன்உசேன்:

இந்நிகழ்ச்சியில் பேசிய அதிமுக அவைதலைவர் தமிழ் மகன்உசேன்,  மத்திய பாஜக அரசின்கீழ் அதிமுக இருந்த காலகட்டத்தில் 2019ம் ஆண்டு பாஜக கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவன் நான் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என தொடர்ந்து தர்காக்களில் பிரார்த்தனைசெய்து வருகிறேன். அதிமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரும் என்று கூறினார்.

முன்னாள்அமைச்சர் ராஜேந்திரபாலாஜி:

அதனைத்தொடர்ந்து பேசிய,முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சில நேரங்களில் ஆண்டவனுக்கே சோதனைவரும் போது கே. டி ராஜேந்திர பாலாஜி ஆகிய எனக்கு சோதனைவராதா? ஆண்டவனின் வாக்கே தடுமாறும்போது எனதுவாக்கு தடுமாறாதா? என கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.