ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி விநியோகிக்கப்படும் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

ரேசன் கடைகளில் பாக்கெட் அரிசி விநியோகிக்கப்படும் - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் சக்கரபாணி தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டதாக  தெரிவித்தார்.

இதேபோல்,  கூட்டுறவுத்துறையில் புதிய அறிவிப்புகளை  அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட்டார். சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 10 ஆயிரத்து 292 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கிஸான் திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் பெண்களுக்கு வட்டியில்லாமல் 218 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.