சென்னையில் மூடுபனி...! திருப்பிவிடப்பட்ட விமானங்கள்...!

சென்னையில் மூடுபனி...! திருப்பிவிடப்பட்ட விமானங்கள்...!

சென்னை புறநகர்களில் இன்று காலை ஏழு மணிக்கு மேல் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன.

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து 248 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு காலை 7 மணிக்கு வந்து கொண்டு இருந்த விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 

அதுப்போல் கோவையில் இருந்து 92 பயணிகளுடன் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் கோவைக்கே திரும்பி சென்றது. காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து 84 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் காலை 7.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாமல் கோவைக்கு திருப்பி விடப்பட்டது.  

மேலும் மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மலேசியா ஆகிய 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருந்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மஸ்கட், பெங்களூர், ராஜமுந்திரி, கொல்கத்தா, டெல்லி ஆகிய 5 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பனிமூட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. வானிலை சீரடைந்து திருப்பி அனுப்பப்பட்ட  விமானங்கள் சென்னை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : கோயம்பேடு வணிக வளாகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள்..!