பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்ட விமானம்...! அவசரமாக கோவையில் தரையிறக்கம்...!

பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்ட விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்ட விமானம்...! அவசரமாக கோவையில் தரையிறக்கம்...!

பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்ட விமானத்தில் 92 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் விமானத்தில் இருந்து புகை கசிவிற்கான எச்சரிக்கை விளக்கு எரிந்ததால், விமானி அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இன்று நண்பகல் 12. 57 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானத்த்தை கோ ஏர் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து சரிபார்த்த பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு மாலத்தீவு நாட்டிற்கு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானம் ஏர்பஸ் 320 ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.