விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்க்க கருவிகளை கண்டுபிடியுங்கள் - நடிகர் கார்த்தி

விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்க்க கருவிகளை கண்டுபிடியுங்கள் - நடிகர் கார்த்தி

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
நீர்நிலைமீட்பு, பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம்,சந்தைப்படுத்துதல் என விவசாயம் சார்ந்த புதுமைகளை உட்புகுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, விவசாய பெருமக்கள் விருதுபெறுவது திருவிழாப்போல் உள்ளதாக பெருமைபட கூறினார். விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட கார்த்தி, விவசாயம் சார்ந்த கருவிகள் கண்டு பிடிப்பதற்கான கண்காட்சிகள் விரைவில் நடத்த உள்ளதாக குறிப்பிட்டார்.