விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான அம்சங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழக சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரும்பு அறுவடைக்கான புதிய தொழில்நுட்பங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக தீர்வு காண விரைவில் தனியார் ஆலைகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.