கவனிக்க ஆள் இல்லாததால் தந்தை, மகன் தற்கொலை! லெட்டர் மூலம் வெளிவந்த உண்மை!!

சென்னை கோயம்பேடு பகுதியில் தந்தை, மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவனிக்க ஆள் இல்லாததால் தந்தை, மகன் தற்கொலை! லெட்டர் மூலம் வெளிவந்த உண்மை!!

கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் கங்காதரன். 77 வயதான இவருக்கு ஞானம் என்ற மகனும், சாமந்தி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில், கங்காதரன் மற்றும் அவரது மகன் ஞானம் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் மகள் சாமந்தி வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வந்த போது தந்தை மற்றும் சகோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்துள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அதில், இருவரையும் சரிவர பார்க்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.