பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. சாகற வரைக்கும் ஜெயில்ல போடுங்க..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

மதுரையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. சாகற வரைக்கும் ஜெயில்ல போடுங்க..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

மதுரையில் 12 வயது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை அளித்ததாக கடந்த 2015-ஆம் ஆண்டு மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையானது, மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கானது நீதிபதி ராதிகா முன்பாக விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் பெற்ற மகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த தந்தைக்கு  ஆயுள் தண்டனயும், 5000ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பு அளித்தார். அதனைதொடர்ந்து  பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.