கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்களில் தொய்வு : மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்களில் தொய்வு : மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துப்பட்டு வருவது தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக  தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 19 ஆம் தேதி 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 26ஆம் தேதி 3ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் 13 மாவட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தேனி, கோவை, திண்டுக்கல், திருச்சி, தேனி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக கூறியுள்ளார்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் மாவட்ட செயல்பாடுகளும் திருப்தியாக இல்லை என்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேற்கூறிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு  அறிவுறுத்தியுள்ளார்.