அரக்கோணத்திலும் திட்டமிட்டு சாதிக்கலவரம்... திருமுருகன்காந்தி, திருமாவளவன் ஆவேசம்...

அரக்கோணம் சோகனூர் சாதிவெறி, இரட்டைப் படுகொலை குறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அரக்கோணத்திலும் திட்டமிட்டு சாதிக்கலவரம்... திருமுருகன்காந்தி, திருமாவளவன் ஆவேசம்...

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்தியரிகையாளர்கள் சந்திப்பு கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய திருமுருகன் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி பொன்பரப்பி சம்பவம் போலவே தான் அரக்கோணத்திலும் திட்டமிட்டு சாதிவெறி கலவரம் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் பேசுகையில், பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய சிந்தனை கொண்டவர்களையும்  அனைத்து சாதியிலும் உள்ள ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டங்களை நாம் வெற்றி பெற முடியும் என குறிப்பிட்டார்.