" மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக..." - முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் என தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்துள்ளார்.

" மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக..." - முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

கணிணி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் என தஞ்சையில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்துள்ளார். 

இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் 45 ஆவது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவ நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பல்வேறு மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை இளம் மருத்துவர்களுக்கு  தெரிவித்தனர். மேலும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக,  முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

இது குறித்து பேசிய அவர், " அறிவியல் தொழில்நுட்பம், எல்லா துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. அந்தவகையில் மருத்துவ அறுவை சிகிச்சையிலும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. கத்தரிகோலால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது இயந்திரம் மூலம் மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் புதிய வகை அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் வெளியாகிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஆய்வு காலம் முழுவதும் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

கொரோனா தாக்கத்தில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீண்டுவர காரணம் அறிவியல் வளர்ச்சி தான். அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால், கொரோனாவிலிருந்து  மீள 10 ஆண்டு காலம் ஆகி இருக்கும். உலகளவில், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தால், நோய்களும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனால் மருத்துவர்களின் தேவைகளும் அதிகமாக உள்ளது. மேலும், அதற்கேற்ற அறிவியலும் தேவையாக உள்ளது.

உலகில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவபட்டுள்ளது, நமது நாட்டிலிருந்து செயற்கைக்கோள் நூறுக்கும் மேற்பட்டவை விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைகோள் அனுப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளது. வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறியப்படலாம் என கூறுகிறார்கள். கணிணி புரட்சியைப் போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் " என பேசியுள்ளார்.