”ஈரோடு தேர்தல்.... அதிமுக ஆதரவா.... பதிலளிக்க விருப்பமில்லை...” அண்ணாமலை கருத்து!!!

”ஈரோடு தேர்தல்.... அதிமுக ஆதரவா.... பதிலளிக்க விருப்பமில்லை...” அண்ணாமலை கருத்து!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்... அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்....

இரட்டை இலையில்..:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என திட்டவட்டமாக தெரிவித்த அண்ணாமலை, அதிமுக சார்பாக  ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினார்.

வலியுறுத்திய தலைமை:

சென்னை, தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் ஈ.பி.எஸ். , ஓ.பி.எஸ்-ஐ தனித்தனியாக சந்தித்ததாகவும், அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறினார். 

பாஜக தலையிடாது:

மேலும் கூட்டணி கட்சியின் உட்கட்சிப் பிரச்சனையில் என்றும் பாஜக தலையிடாது என கூறிய அவர், கூட்டணி தர்மத்தின் படி தேர்தலில் அதிமுக வேட்பாளரே நிற்க வேண்டுமென என்பது தங்களது விருப்பம் என கூறினார். இரு தரப்பினரை பிரித்து குளிர் காயும் நோக்கம் பாஜகவினருக்கு கிடையாது எனவும் தெரிவித்தார்.

உறுதியான வேட்பாளர்:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வலிமையான மற்றும் உறுதியான ஒரு வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என கூறிய அண்ணாமலை,  அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் களமிறங்கினால் வாக்குகள் பிரியும், ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறினார். 

பாஜக உழைக்கும்:

அதிமுக சுயேட்சையாக போட்டியிட்டால் தேசிய கட்சியாக பாஜக எப்படி ஆதரவளிக்கும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை,இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர் வெற்றி பெற பாஜக உழைக்கும் என உறுதியளித்தார்.

பதிலளிக்க விருப்பமில்லை:

முன்னாள் அமைச்சர் பொன்னையனின் பாஜக கருத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்த அண்ணாமலை, பாஜகவை புரிந்துகொள்ள கண்ணாடி அணிந்து சரியாக வரலாற்றை படிக்க வேண்டும் என சாடினார்.  

இதையும் படிக்க:   கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ.... பலியானோர் எண்ணிக்கை உயர்வு!!