மேகதாது அணை குறித்து பேசி தீர்த்து கொள்ளலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்...

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாது அணை குறித்து பேசி தீர்த்து கொள்ளலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  எடியூரப்பா கடிதம்...

அந்தக் கடிதத்தில் மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே அணை கட்டப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ள எடியூரப்பா, இரு மாநிலங்களின் நலனுக்காகவே அணை கட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காவிரியில் தமிழக அரசு இரண்டு நீர் மின் நிலைய திட்டங்களை கொண்டு வருவதற்கு கர்நாடகா அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மேட்டூர் அணைக்கு கீழ் தமிழ்நாடு செயல்படுத்தி வரும் சிறு சிறு நீர் திட்டங்களுக்கும் கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், எந்த பிரச்னையாக இருந்தாலும் இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இரு மாநில உறவுகளை வலுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் தெரிவித்துள்ளார்.