ஈபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற வலியுறுத்தி போஸ்டர்...சேலத்தில் பரபரப்பு!

ஈபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற வலியுறுத்தி போஸ்டர்...சேலத்தில் பரபரப்பு!

அதிமுகவிற்கு தொடர் தோல்வியை பெற்று தந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


தமிழகத்தில் அடுத்தடுத்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க. தொடர் தோல்வியை சந்தித்தது.  இந்நிலையில், அதிமுகவின் தொடர் தோல்விக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் எனவும், அதிமுகவை அடியோடு அழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதம்... நடவடிக்கை எடுக்கப்படுமா?!!

அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடியே காரணம் எனவும், அதிமுகவை அடியோடு அழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.